Archives: நவம்பர் 2021

லாப்ரடார் தேவதை

கேப் டேஷ்வுட்டும், அவருடைய செல்லமான கருப்பு லாப்ரடார் நாயாகிய சேலாவும் 2019ஆம் ஆண்டு ஒரு மறக்கமுடியாத சாதனையை நிகழ்த்தியுள்ளனர். வருடத்தில் 365 நாட்களும் பயணித்து மலையுச்சியை அடைந்து சாதனை நிகழ்த்தியுள்ளனர். 

அவரிடத்தில் சொல்லுவதற்கு அழகான கதை ஒன்று உண்டு. “தவறான குடும்ப வாழ்க்கை” என்று சொல்லி, தன்னுடைய 16ஆம் வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். “நீங்கள் எப்போதாவது மக்களால் மனமடிவாக்கப்பட்டீர்கள் என்றால், நீங்கள் அதை மறந்து வேறொன்றில் கவனம் செலுத்துங்கள்” என்று அவர் சொல்லுகிறார். உங்களுக்குத் தெரியுமா? இந்த நபருக்கு மலையேற்றமும், அவருடைய செல்ல நாயான இந்த கருப்பு லாப்ரடாரின் நிபந்தனையற்ற அன்புமே அவருடைய கவனத்தைத் திசைதிருப்ப உதவியது.

என்னைப்போன்று விலங்குகளை அதிகமாய் நேசிப்பவர்கள், அவைகளை நேசிப்பதற்கு காரணம், எங்குமே கிடைக்காத, அவைகள் கொடுக்கும் இனிமையான, நிபந்தனையற்ற அன்பே. மற்றவர்களின் தோல்விகளைக்காட்டிலும் அவர்கள் சிரத்தையின்றி காண்பிக்கும் அன்பு சிறந்தது. தேவனுடைய அசைக்கமுடியாத, எல்லையில்லாத அன்பே உலகத்தை இயக்கிக்கொண்டிருக்கிறது. 

சங்கீதம் 143ல், சங்கீதக்காரன் அவருடைய பெரும்பாலான ஜெபங்களில் தேவனுடைய அசையாத நிலையான கிருபையே, அவருடைய தனிமையில் அவருக்கு ஆறுதலாயிருந்துள்ளது என்கிறார் (வச.12). தனது வாழ்க்கை முழுவதும் தேவனோடு நடந்த அனுபவம், “அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும்” என்று நம்புவதற்கு பெலப்படுத்துகிறது (வச. 8).

தேவனை நம்புவதற்கு போதுமான நம்பிக்கையோடு, நமக்கு தெரியாத பாதைகளில் அவருடைய வழிநடத்துதலை சார்ந்துகொள்வோம் (வச. 8). 

அவர் வெறுமையானதை நிரப்புகிறார்

பதினைந்து வயது நிரம்பிய இளம்பெண்ணின் மேலாடையின் கைகளை பாதி இழுத்துவிட்டுக்கொண்டதை, உளவியல் நிபுணர் கவனித்தார். அது பொதுவாக, சுய தீங்கில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்தும் நீளமான கையுறைகள் கொண்ட ஆடை. அவள் தன் சட்டையின் கையுறையை மேலே தூக்கி, ஒரு பிளேடைக் கொண்டு தன் முன்னங்கையில் “வெறுமை” என்று கீறிக்கொண்டதைப் பார்த்த லெவின் திடுக்கிட்டார். அவள் சோகமாயிருந்தாள், ஆனால் அவளுக்குத் தேவையான உதவியை பெறுவதற்கு அவள் ஆயத்தமாயிருந்தாள். 

இன்று அந்தப் பெண்ணைப்போலவே தங்கள் இருதயங்களில் “வெறுமை” என்று கீறிக்கொண்ட அநேகர் உண்டு. இந்த வெறுமைகள் “பரிபூரணப்பட” (யோவான் 10:10) இயேசு வந்திருக்கிறார் என்று யோவான் அறிவிக்கிறார். பரிபூரணப்பட விரும்பும் இருதயத்தை தேவன் ஒவ்வொருவருக்குள்ளும் வைத்து, அவர்கள் தன்னுடைய உறவில் பிரியப்படவேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதே நேரத்தில், ‘திருடன்’ மக்களையும் சூழ்நிலைகளையும் பயன்படுத்தி, அவர்களை கொள்ளையிடுவதற்கே வருவான் என்றும் எச்சரிக்கிறார் (வச. 1,10). இருவரின் கூற்றுக்கள் ஒன்றுக்கொன்று முரணாகவும் சாயலாகவும் இருக்கிறது. ஆனால் இயேசு கொடுக்கும் “நித்திய ஜீவன்” நிஜமானது, “ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை” என்றும் வாக்களிக்கிறார் (வச. 28). 

நம்முடைய இருதயத்தில் இருக்கும் வெறுமையை கிறிஸ்துவாலேயே பரிபூரணமடையச் செய்ய முடியும். நீங்கள் வெறுமையாய் உணர்ந்தால், இன்றே அவரைக் கூப்பிடுங்கள். தொடர்ச்சியாய் துன்பத்தை அனுபவிக்கிறீர்கள் என்றால், தேவனுடைய ஆலோசனைக்கு செவிகொடுங்கள். நிறைவுள்ள பரிபூரணமான வாழ்க்கையை கிறிஸ்துவால் மட்டுமே கொடுக்கமுடியும். வாழ்க்கையின் முழுமையான அர்த்தம் அவரிடத்திலேயே உண்டு. 

தொடர்ந்து போகமுடியாத போது

எனது தந்தைக்கு 2006ஆம் ஆண்டு நரம்பியல் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதினால் அவருடைய நினைவுகள், பேச்சு மற்றும் உடல் அசைவுகளின் கட்டுப்பாடு ஆகியவற்றை இழந்தார். 2011ல் அவர் படுத்தபடுக்கையானார். என் தாயார் அவரை வீட்டில் வைத்து பராமரித்துக்கொண்டார்கள். அந்த நோயின் ஆரம்பகட்டம் இருண்டதாயிருந்தது. நான் மிகவும் பயந்தேன். ஒரு நோயாளியை வீட்டில் வைத்துப் பராமரிப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. பணத்தேவைக்குறித்தும், எனது தாயாரின் உடல் ஆரோக்கியத்தைக் குறித்தும் நான் கவலைப்பட்டேன். 

ஒவ்வொரு நாள் காலையிலும் நான் எழுந்திருக்கும்போது, என் இருதயத்தைப்போன்றே இருள் சூழ்ந்த அந்த அனுபவத்திலிருந்து வெளிவருவதற்கு புலம்பல் 3:22 எனக்கு உதவியது: “நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே.” “நிர்மூலமாதல்” என்ற வார்த்தைக்கான எபிரெய பதம், “முற்றிலும் அழிக்கப்பட்ட” அல்லது “முடிவுக்கு வருதல்” என்று அர்த்தங்கொள்கிறது. 

ஒவ்வொரு நாளையும் நாம் கடந்துசெல்வதற்கு தேவனுடைய கிருபை நம்மை ஊக்குவிக்கிறது. நம்முடைய சோதனைகள் நம்மை மேற்கொள்வதாக தெரியலாம், ஆனால் அது நம்மை சேதப்படுத்தாது, ஏனென்றால் நம்மிடம் இருக்கும் தேவனுடைய கிருபை அதைக்காட்டிலும் மேலானது.

என்னுடைய குடும்பத்திற்கு தேவன் பல விதங்களில் தன்னுடைய உண்மைத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார். என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள், மருத்துவர்களின் நல் ஆலோசனைகள், பொருளாதார உதவிகள் ஆகியவற்றின் மூலமாய் தேவனுடைய கிருபையை நான் பார்க்க நேர்ந்தது. இவைகள் அனைத்தும், என் தந்தையை ஒரு நாள் பரலோகத்தில் சந்திப்பேன் என்று எனக்கு நினைவுபடுத்தியது. 

நீங்கள் இருளான பாதையில் பயணிக்கிறவர்கள் என்றால், உங்கள் நம்பிக்கையை இழக்கவேண்டாம். நீங்கள் சந்திக்கிற பிரச்சனைகள் உங்களை ஒருபோதும் மேற்கொள்வதில்லை. தேவனுடைய மெய்யான அன்பிற்காகவும் அவருடைய கிருபைக்காகவும் அவரைத் தொடர்ந்து நம்புவோம். 

தேவன் காயங்கட்டுகிறார்

அதீத்தும் அவருடைய மனைவி ரேஷ்மாவும் கலைப்பொருள் அங்காடிக்கு சென்று தன் வீட்டில் மாட்டுவதற்கு ஒரு ஓவியத்தைத் தேடினர். அதீத் ஒரு சரியான ஓவியத்தை தேர்ந்தெடுத்து, ரேஷ்மாவை பார்க்கும்படிக்கு அழைத்தார். அந்த செராமிக் ஓவியத்தின் வலதுபுறத்தில் கிருபை என்ற வார்த்தை பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதின் இடதுபுறத்தில் இரண்டு விரிசல்கள் ஏற்பட்டிருந்ததால், அது உடைந்திருக்கிறது என்று ரேஷ்மா அதேபோன்ற வேறொரு உடையாத ஓவியத்தைத் தேடினாள். ஆனால் அதீத் “இல்லை,” “அதில் தான் செய்தியே இருக்கிறது” என்றார். “நாம் உடைக்கப்பட்டவர்களாய் இருக்கும் தருணத்தில் தான் கிருபை நம்மை தேடிவருகிறது” என்றார். எனவே அந்த விரிசல் உள்ள ஓவியத்தையே அவர்கள் வாங்க தீர்மானித்தனர். அதற்கான தொகையை செலுத்த முயலும்போது, அந்த கடைக்காரர், “ஓ, இது உடைந்திருக்கிறது” என்று சொல்ல, ரேஷ்மா, “நாங்களும் தான்” என்று மெல்லமாய் சொன்னாள். 

“உடைக்கப்பட்டவர்கள்” என்றால் என்ன? ஒருவர் இவ்விதமாய் பதிலளிக்கிறார்: “நாம் எவ்வளவுதான் முயற்சித்தாலும், வாழ்க்கை வளமாவதற்கு பதிலாக, சரிவடைந்துகொண்டே தான் இருக்கிறது.” அது தேவன் நம்முடைய வாழ்க்கையின் தேவை என்பதையும் அவருடைய இடைபாடு நம்முடைய வாழ்க்கையில் அவசியம் என்பதையும் உணர்த்துகிறது.

“அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை” என்று பவுல் அப்போஸ்தலர் நம்முடைய உடைக்கப்படுதலை விவரிக்கிறார் (எபேசியர் 2:1). மன்னிக்கப்படுதலுக்கும் மாற்றத்திற்குமான நம்முடைய தேவைக்கு 4 மற்றும் 5ஆம் வசனம் பதிலளிக்கிறது: தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே... நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.”

“நான் உடைக்கப்பட்டவன்” என்று அவரிடம் ஒத்துக்கொள்ளும்போது அவருடைய கிருபையினாலே நம்மை சுகமாக்க அவர் ஆயத்தமாயிருக்கிறார்.